Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சி அணியை வீழ்த்திய காரைக்குடி காளை

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2018 (09:14 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று திண்டுக்கல் மைதானத்தில் நடந்த போட்டியில் காஞ்சி மற்றும் காரைக்குடி அணிகள் மோதின.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் அடித்தது. விஷால் 40 ரன்களும், சஞ்சய் 27 ரன்களும் அடித்தனர்.
 
இதனையடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது. காரைக்குடி அணி கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதாவின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா 93 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதினை தட்டி சென்றார். 
 
இந்த வெற்றி காரைக்குடி அணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments