Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோஹித் சர்மா அபாரம்: சென்னையை வீழ்த்திய மும்பை

Advertiesment
சென்னை
, ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (07:03 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேபோல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து கொள்ள சென்னை அணியும் தீவிரமாக இருந்தது.
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 75 ரன்களும், ராயுடு 46 ரன்களும், கேப்டன் தோனி 26 ரன்களும் எடுத்தனர்.
 
சென்னை
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, பொறுப்புடன் விளையாடி 19.4 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 56 ரன்களும், லீவீஸ் 47 ரன்களும், யாதவ் 44 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது. தோல்வி அடைந்தாலும் சென்னை அணி முதலிடத்தில் தான் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெய்னா, ராயுடு அதிரடியில் மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு