Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரஸ்ஸிங் ரூமில் சகோதரத்துவம்… இந்திய அணியின் வெற்றிக்கு இதுவே காரணம்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (08:48 IST)
இந்திய அணியின் வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை தமிழக வீரர் நடராஜன் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா 48 ஓவர்களுக்கு 329 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் கடைசி ஓவரை சிறப்பாக வீசி நடராஜன் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனால் கிரிக்கெட் உலகில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்ட அவர் ‘இது ஒரு அருமையான விளையாட்டு. வரலாற்று சிறப்புமிக்க தொடரில் நானும் பங்களிப்பது பெருமையான விஷயம். ஓய்வறையில் நிலவும் சகோதரத்துவம், இறுதிவரை போராடும் விடா முயற்சியுமே வெற்றிக்குக் காரணம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments