Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது நெல்லை.. குவாலிஃபையர் 2 போட்டியில் த்ரில் வெற்றி..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (07:18 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. 
 
ஏற்கனவே இந்த தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று குவாலிஃபையர் 2 போட்டி நடந்தது. திண்டுக்கல் மற்றும் நெல்லை அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் நெல்லை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 185 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நெல்லை அணி கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் நாளை லைகா மற்றும் நெல்லை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெறும் என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணியே இந்த ஆண்டின் டிஎன்பிஎல் சாம்பியன் பட்டம் பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments