Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி...ரவிக்குமார் தாஹியா சாதனை

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (16:53 IST)
Tokyo Olympics
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர்   ரவிகுமார் தாக்கியா வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
 
 
கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.
 
 
இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
 
 
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் பானு, பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கமும், பிவி சிந்து, பேட்மிண்டனில் வெணகலப் பதக்கமும் வென்று சாதித்தனர். இன்று ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று சாதித்துள்ளது.
 
 
அதேபோல்  ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரவிகுமார் தாக்கியா அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் 57 கிலோ எடைபிரிவில் ரஷ்ய வீரர் ஜவுரை  எதிர்கொண்டு 4.7 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
Relish it Ravi! ❤️
 
He fought hard and gave it his all to become only the second

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments