Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு விக்கெட்டை கையில் வைத்து டிரா செய்த பாகிஸ்தான்: நியூசிலாந்து ஏமாற்றம்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (20:37 IST)
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை கையில் வைத்து பாகிஸ்தான் அணி போராடி டிரா செய்துள்ளது
 
ஜனவரி இரண்டாம் தேதி ஆரம்பித்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் 277 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 
 
இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 408 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது இன்னிங்சில் களமிறங்கியது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 304 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது 
 
இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்திருந்தால் நியூசிலாந்தும் இன்னும் 15 ரன்கள் எடுத்திருந்தால் பாகிஸ்தானும் வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

‘எங்களுக்கு இப்போ RCB தான் இன்ஸ்பிரேஷன்’… CSK பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை!

ஒரு ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய ஹேசில்வுட்… RR கையிலிருந்த வெற்றியைப் பறித்த ஆட்டநாயகன்!

‘எவ்ளோ அடிச்சாலும் இந்த மைதானத்துக்குப் பத்தாது’… வெற்றிக்குப் பின் கோலி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments