Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: பெங்களூரு அணி சாம்பியன்

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (07:23 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நடந்து கொண்டிருந்த புரோ கபடி போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதி போட்டியில் பெங்களூரு அணி குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

நேற்றைய இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையாக போராடினர். முதல் பாதியின் 12 நிமிடங்கள் வரை இரண்டு அணிகளும் தலா 4 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தாலும் அதன்பின்னர் பெங்களூர் அணியின் கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க தொடங்கியது. முதல் பாதி முடியும் ஒரு நிமிடத்திற்கு முன்பு குஜராத் அணி ஒரே ரைடில் நான்கு புள்ளிகள் பெற்றதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. முதல் பாதியின் முடிவில் குஜராத் அணி 16-9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் இருந்தது.

இருப்பினும் இரண்டாம் பாதியில் சுதாரித்து விளையாடி பெங்களூர் அணி கொஞ்சம் கொஞ்சமாக புள்ளிகளை சேர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 23-22 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத்தை முந்தவும் செய்தது. இந்த முன்னணி கடைசி வரை தொடரந்ததால் இறுதியில் 38-33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத்தை வீழ்த்தி 2018ஆம் ஆண்டின் சாம்பியன் பட்டத்தை பெங்களூரு அணி வென்றது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments