Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் தலைவாஸ் அணிக்கு கிடைத்த வெற்றி

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (22:24 IST)
புரோ கபடி போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா அணியை வென்றது. அதன் பின்னர் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்று புனே அணிக்கு எதிரான போட்டியில்  வெற்றி பெற்றது.

இன்று புனே அணிக்கு எதிராக நடந்த விறுவிறுப்பான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வீர்ர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். அதேபோல் புனே வீரர்களும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். இருப்பினும் தமிழ் தலைவாஸ் அணி இறுதியில் 36-31 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் மும்பை அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 41-20 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. நாளை பெங்களூரு மற்றும் ஹரியானா அணிகளும், புனே மற்றும் மும்பை அணிகளும் மோதவுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments