Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: புனே அணிக்கு மேலும் ஒரு வெற்றி

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (06:00 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் நேற்று புனே மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது

இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் அதிக புள்ளிகளை எடுத்ததால் இரு தரப்பினர்களுக்கு புள்ளி மழை பொழிந்தது. முதல் பாதியிலும் ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் யார் இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாமல் போட்டி த்ரில்லாக சென்று கொண்டிருந்தது. இதனால் பார்வையாளர்களுக்கு நேற்று செம விருந்து கிடைத்தது

இறுதியில் புனே அணி 53 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 50 புள்ளிகளும் பெற்றதை அடுத்து 3 புள்ளிகள் வித்தியாசத்தில் புனே அணி வென்றது. இந்த வெற்றி புனே அணிக்கு கிடைத்த 7வது வெற்றி ஆகும். அந்த அணி 21 போட்டிகளில் விளையாடி 11 தோல்விகளை பெற்ற நிலையில் இந்த வெற்றி ஒரு ஆறுதல் ஆகும்

நேற்றைய போட்டியின் முடிவுக்கு பின் டெல்லி, பெங்கால், ஹரியானா, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. இதில் டெல்லி, பெங்களூரு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments