Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியில் குறுக்கிட்ட மழை: 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் பாகிஸ்தான்

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:03 IST)
5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் நேற்று இங்கிலாந்தில் உள்ள செளதாம்டன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது
 
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் அபித் அலி களமிறங்கினார்கள். ஷான் மசூத் ஒரே ஒரு ரன்னில் அவுட்டாகியதால் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அடைந்தது. இதனை அடுத்து கேப்டன் அசார் அலி 20 ரன்களுக்கு அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரரான அபித் அலி அரைசதம் அடித்த நிலையில் 60 ரன்களுக்கு அவுட் ஆனார். அசாத் சபிக் 5 ரன்களிலும், பவத் அலாம் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர்
 
தற்போது பாபர் அசாம் 25 ரன்களிலும் முகமது ரிஸ்வான் 4 ரன்கள் எடுத்தும் அவுட் ஆகாமல் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments