Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (11:08 IST)
பெங்களூரு அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது என்பதும் வரும் 9-ஆம் தேதி முதல் போட்டி மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் முதல் போட்டிக்கான ஏற்பாடுகளை ஐபிஎல் நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென முதல் போட்டியில் பங்கு கொள்ள இருக்கும் பெங்களூர் அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று உறுதி என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி முக்கிய வீரரான டேனியல் சாம்ஸ் என்ற வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்ப்டுத்தி கொண்டதாக பெங்களூர் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அவர் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது 
 
ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில் முதல் போட்டி தொடங்கும் முன்னரே பெங்களூரு அணியின் முக்கிய வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வீரரின் பெருமையைக் கோப்பைகள் தீர்மானிக்காது- கோலிக்கு ஆதரவாக சேவாக் கருத்து!

இந்திய டெஸ்ட் அணிக்குப் புதியக் கேப்டன்… ரோஹித் ஷர்மாவை நீக்க பிசிசிஐ முடிவு!

இன்று சிஎஸ்கே - கேகேஆர் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

மூடப்பட்ட தரம்சாலா ஏர்போர்ட்! ஐபிஎல் நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்! நிறுத்தப்படுமா ஐபிஎல் சீசன்?

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments