Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம ஜெயிச்சிட்டோம்..! சவுதி அரேபியாவில் லீவு அறிவித்த மன்னர்!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (09:33 IST)
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் இன்று சவுதி அரேபியாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு கத்தாரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் அர்ஜெண்டினா – சவுதி அரேபியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா அணி சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இது மெஸ்ஸி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் சவுதி அரேபியாவின் வெற்றியை அம்மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

சவுதி அரேபியாவின் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சவுதியில் இன்று பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்திற்கும் ஒருநாள் விடுமுறையை அறிவித்துள்ளார் சவுதி மன்னர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments