Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ தலைவரானதால் ரூ.7 கோடி நஷ்டமடையும் கங்குலி!

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (20:08 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி சமீபத்தில் பிசிசிஐயின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பதவியில் அவர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் ஆனதால் சவுரவ் கங்குலிக்கு சுமார் 7 கோடி வரை வருமான இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. தற்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும், தொலைக்காட்சியில் கிரிக்கெட் நிபுணராகவும் இருந்து வருவதால் அவருக்கு பல்வேறு வருமானங்கள் கோடிக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றது 
 
ஆனால் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் அவர் அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் சுமார் 7 கோடி ரூபாய் வருமானத்தை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி பிசிசிஐ தலைவர் ஆகி விட்டதால் அவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments