Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மிருதி மந்தனா படைத்த புதிய சாதனை!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (14:03 IST)
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவுக்கு அரையிறுதியில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. 

 
இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 230 என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிய நிலையில் இந்திய வீராங்கனைகளின் அபாரமான பந்து வீச்சு காரணமாக 43 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
 
இதனையடுத்து இந்திய மகளிர் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அடுத்து இந்தியா 6 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு சென்று உள்ளதால் அரையிறுதிப் போட்டியில் பங்கு பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த போட்டியில் தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவர் 17வது ரன் எடுத்த போது சர்வதேச போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 3-வது இந்திய வீராங்கணை என்ற சாதனையை படைத்தார். 
 
5000 ரன்களை கடந்த முதல் முதல் இந்திய வீராங்காணை என்ற சாதனையை இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் படைத்தார். அடுத்தபடியாக இந்தியாவின் ஆல் ரவுண்டர் ஹர்மன்பிரீத் சிங் 5000 ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கணை என்ற சாதனையை படைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments