Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீகாக் அதிரடி ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி: தொடர் சமன் ஆனது

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (22:14 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்தத் தொடர் இரு தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி சமனானது
 
 
பெங்களூரில் இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. தவான் 36 ரன்களும், ரிஷப் பண்ட் 19 ரன்களும், ஜடேஜா 19 ரன்களும் எடுத்தனர்
 
இதனை அடுத்து 135 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டீகாக் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.மேலும் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் டி20 தொடர். சமனானது இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments