Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கோவிட் ஒரு பொருட்டல்ல… ஐசிசி கொண்டு வந்த மாற்றம்!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (12:04 IST)
டி20 உலகக்கோப்பைக்காக ஐசிசி  கிரிக்கெட் வாரியம் கோவிட் விதிகளை கணிசமாக தளர்த்தியுள்ளது.

 இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு இன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் யாரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணி ரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் ஐசிசி  கிரிக்கெட் வாரியம் கோவிட் விதிகளை கணிசமாக தளர்த்தியுள்ளது. ஆம் கோவிட் பாசிட்டிவ் கிரிக்கெட் வீரர்களை பங்கேற்க ஐசிசி அனுமதித்துள்ளது. வீரர்களுக்கு கட்டாய கோவிட் சோதனை என்பதனை தளர்த்தியுள்ளது.

மேலும், போட்டியில் ஒரு வீரர் கொரோனா வைரஸுக்கு சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால், அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. அந்த வீரர் விளையாட்டில் பங்கேற்பது பொருத்தமானதா என்பதை குழு மருத்துவர்கள் முடிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments