Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கேவலமாக தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்: ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (08:22 IST)
புரோ கபடி போட்டி தொடரில் கடந்த தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வி அடைந்து வரும் தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடந்த போட்டியிலும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த ஆண்டின் புரோ கபடி போட்டி தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் சமீபத்தில் நடந்த புனே அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் டிரா செய்தது. அந்த போட்டியில் புனே அணி செய்த மிகப்பெரிய தவறு தான் போட்டி டிரா ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற உபி அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெறும் 22 புள்ளிகள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. உபி அணி 42 புள்ளிகள் எடுத்து 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
 
நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இரு அணிகளும் சம நிலையில் விளையாடியதால் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாத நிலை கடைசி நிமிடம் வரை இருந்தது. இறுதியில் இரு அணிகளும் தலா 28 புள்ளிகள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது
 
 
நேற்றைய போட்டியின் முடிவுக்கு பின்னர் வழக்கம்போல் டெல்லி முதலிடத்தில் உள்ளது. பெங்கால், ஹரியானா, உபி மற்றும் பெங்களூர் அணிகள் அடுத்த நான்கு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்தலைவாஸ் அணி மீண்டு வரவே முடியாத நிலையில் கடைசி இடத்தில் இருப்பதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments