Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (07:50 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கெய்லே மேயர்ஸ் 73 ரன்கள் எடுத்தார்
 
இதனை அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 19 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பதும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments