Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை கைப்பற்றுவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று பலப்பரிட்சை

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (08:30 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் இன்று டெல்லியில் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது
 
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு தீவிரமாக விளையாடும்
 
இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கேப்டன் கோலி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். மேலும் இன்றைய போட்டியில் தோனி களமிறங்குவார் என தெரிகிறது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல ஃபார்மில் உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்றைய போட்டியில் விராத் கோஹ்லி, தவான், ரோஹித் சர்மா, ராயுடு, ராகுல், தோனி, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், ஷமி, விஜய் சங்கர், ஆகியோர் விளையாடும் 11 பேர் அணியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

நேற்றைய போட்டியில் வங்கதேச பவுலர் ஹசன் முகமத் படைத்த சாதனை!

மளமளவென விழுந்த விக்கெட்கள்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்கள் சேர்ப்பு!

டிராவிஸ் ஹெட் 154 ரன்கள் விளாசல்.. இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments