Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனி இலவச குடிநீர்.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (17:19 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இனி இலவசமாக குடிநீர் பாட்டில் வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே கடந்த எட்டாம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை அடுத்து 13-ஆம் தேதி வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து, 18ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான், 23ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், 27ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன.

 இந்த நிலையில் இனி வரும் போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே கிரிக்கெட் போட்டியை பார்க்க வருபவர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments