Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த ஆளுக்கு திமிரு.... வடிவேலு இடத்தை யோகிபாபு கைப்பற்றியது இப்படித்தான்!

vadivelu
Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (14:30 IST)
வடிவேலு சிம்புதேவன் காம்போவின் ஹிட் காம்போவான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.

ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் படமும் கைவிடப்பட்டது. இதனால் லைகா நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வடிவேலு ஈடு செய்யவேண்டும் என்று அவருக்கு ரெட் விதிக்கப்பட்டது. இப்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 
இதையடுத்து அவர் இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். வடிவேலுவின் மறுவருகை ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் திரையுலகக் கலைஞர்களுக்குமே கூட உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 
 
இந்நிலையில் வடிவேலு குறித்த விஷயம் ஒன்றை பிரபல பத்திரிக்கையாளர் வெளிப்படையாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். அதாவது பேய்மாமா படத்தில் முதலில் நடிக்க வடிவேலுவை தான் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால், அந்த சமயத்தில் வடிவேலு திமிரில் ஆடிக்கொண்டிருந்ததால் இதுவரை வைத்து படம் எடுத்தால் அந்த படமே வெளிவராது என எண்ணி வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டார். வடிவேலு இல்லாத அந்த சில வருடம் தான்  யோகி பாபுவின் வாழ்க்கையே மாற்றி அமைத்தது. இனி யோகியை யாரும் அசைக்கமுடியாத அளவிற்கு அவரின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே போனாலும் பணிவு பல மடங்கு உயர்கிறது என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

கமல் & அன்பறிவ் கூட்டணி படத்தில் இருந்து வெளியேறிய லைகா.. பின்னணி என்ன?

இன்று பூஜையோடு தொடங்கும் ‘சூர்யா 46’ படம்..!

7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது?.. அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

கங்கை அமரனுக்கு வயித்தெரிச்சலா?... ஜி வி பிரகாஷுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments