Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து வெற்றியால் வெளியேறியது பாகிஸ்தான்..!

Siva
திங்கள், 24 பிப்ரவரி 2025 (21:57 IST)
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
இதனை அடுத்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கும் நிலையில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்று தகுதி பெறாமல் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியில், வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, 237 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, 46.1வது ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
 
அந்த அணியின் ரச்சின் ரவீந்தரா அபாரமாக பேட்டிங் செய்து 112 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவின் அடிப்படையில், முதலிடம் மற்றும் இரண்டாவது இடம் யாருக்கு என்பதும் தெரிய வரும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments