Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன்- வைரமுத்து டுவீட்

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (16:15 IST)
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில்,  சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி காரணமாக அவர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.


ALSO READ: கல்லூரி மாணவி சத்யா படுகொலை: கைதான சதீஷ்-க்கு அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவல்
 
தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் பற்றிய  பிரபல பாடலாசிரியர் வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், தனக்குக் கிடைக்காதது
யாருக்கும் கிடைக்கக்கூடாதென
ஒரு தங்க மான்குட்டியைத்
தண்டவாளத்தில்
தள்ளினான் ஒரு பேய்மகன்

தனக்குக் கிடைக்காததெல்லாம்
யாருக்கும் கிடைக்கக்கூடாதென
மனிதகுலம் நினைத்திருந்தால்
இந்த பூமி
ஒரு மண்டையோடு போலவே
சுற்றிக்கொண்டிருந்திருக்கும்

கிட்டாதாயின்
வெட்டென மற என இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதாக  தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments