Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ராணி பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் சங்கத்தில் புகார் அளித்த சண்முகராஜன்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (21:46 IST)
சென்னை அருகே விளம்பர படப்பிடிப்பு ஒன்றின் படப்பிடிப்பு நடந்தபோது தனக்கு நடிகர் சண்முகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ராணி காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். பின்னர் ஒருசில மணி நேரங்களில் நடிகை ராணி தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்

நடிகர் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால் புகாரை திரும்ப பெற்றதாக ராணியும், மன்னிப்பு கேட்கவில்லை பொய்ப்புகார் என்பதை உணர்ந்து அவரே புகாரை திரும்ப பெற்றதாக சண்முகராஜனும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தன் மீது பொய்யான தகவலை பரப்பி வரும் ராணி மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் அளித்துள்ளார். தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனக்கு சங்கம் ரெட் கார்டு அளிக்கட்டும் என்றும் தன் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் தான் திரையுலகை விட்டு விலகத் தயாராக இருப்பதாகவும் கூறிய சண்முகராஜன், அதேபோல் நடிகை ராணி குற்றம் செய்திருந்தால் அவருக்கு ரெட் கார்டு அளிக்க வேண்டும் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் சங்கம் என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்