Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன்: நெகிழ்ச்சியான டுவீட்

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (07:08 IST)
கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன்
தமிழக அரசு சமீபத்தில் கலைமாமணி விருதை அறிவித்தது என்பதும் சிவகார்த்திகேயன் யோகிபாபு சரோஜாதேவி ராமராஜன் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
மேலும் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலைமாமணி விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் தனது கையால் விருதை வழங்கினார். இந்த நிலையில் தமிழக முதல்வரிடம் இருந்து கலைமாமணி விருதைப் பெற்ற சிவகார்த்திகேயன் தனது தாயாருக்கு அந்த விருதை சமர்ப்பணம் செய்து அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார் 
 
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் கலைமாமணி விருது குறித்து கூறியதாவது:
 
சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments