Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள் - பிக்பாஸ் வீட்டில் சுஜா புலம்பல்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (14:53 IST)
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை சுஜா, வீட்டில் உள்ள மற்றவர்கள் தன்னிடம் பேசுவதை தவிர்க்கிறார்கள் என புலம்பி வருகிறார்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விஜய் தொலைக்காட்சி ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸிடம் தனியறையில் புலம்பும் நடிகை சுஜா “என்னிடம் யாரும் சரியாக பேசுவதில்லை. எல்லோரும் என்னை தவிர்க்கிறார்கள். தனிமையாக உணர்கிறேன்” என சோகமாக பேசுகிறார்.
 
ஏற்கனவே, தன்னுடைய குடும்பம், சினிமாவில் சந்தித்த பிரச்சனை பற்றி பிக்பாஸிடம் தனியறையில் புலம்பி அழுது வடிந்தார் சுஜா வருணி. ஓவியாவை காப்பி அடிக்க முயலும் அவர், தற்போது மீண்டும் அதேபோல் ஒரு ஸ்டெண்டை கையில் எடுத்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் விளையாட்டாக சில செய்கைகளில் ஈடுபட்டதற்கு, அவர்களிம் கோபமாக பேசினார் சுஜா. அவர்கள் விளக்கம் அளித்த பின்பும் மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பி எரிச்சலை உண்டாக்கினார். எனவே, அவரிடம் பேசுவதை எல்லோரும் தவிர்த்து வருவதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments