Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கே எப்போ கல்யாணம்னு தெரியாது - மன்னிப்பு கேட்ட பிரணிதா!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (12:09 IST)
கார்த்தியின் சகுனி படம் மூலம் பிரபலம் ஆன நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.
 
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
 
நேற்று முன்தினம் நடிகை பிரணிதாவுக்கு நிதின் ராஜு என்பவருடன் மிகவும் நெருக்கமான உறவினர்கள் நண்பர்களோடு எளிமையான முறையில் பெங்களுருவில் திருமணம் நடந்துள்ளது. பிரணிதாவின் நீண்ட நாள் காதலரான நிதின் ராஜு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென திருணம் செய்துக்கொண்டதால் பெரும்பாலானோர் இந்த செய்தியை நம்பவில்லை. இது வதந்தியாக இருக்கக்கூடும் என பேசத்துவங்கினர். இப்படியான நேரத்தில் இது குறித்து பேட்டியளித்த நடிகை பிரணிதா,  திருமணத்திற்கு அழைக்காத்தற்கு மன்னித்துவிடுங்கள். கொரோனா பிரச்சனையால் எப்போது திருமணம் நடைபெறும் என்பதை எங்களாலே உறுதி செய்ய முடியவில்லை. ஊரடங்கில் இருந்து வெளியில் வந்ததும் இதை சிறப்பாக கொண்டாடுவோம் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் “NTRNEEL” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வித்தியாசமான முறையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்குப் ப்ரமோஷன் செய்த படக்குழுவினர்!

மீண்டும் தாமதம் ஆகும் தனுஷின் அடுத்தப் பட ஷூட்டிங்!

துப்பறிவாளன் 2 அவ்ளோதான்… கணக்குப் பார்த்து மூட்டைக் கட்டிவைத்த விஷால்!

ஜூலையில் தொடங்கும் சூர்யாவின் அடுத்த பட ஷூட்டிங்… ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் இல்லையாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments