Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி காரில் வந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஏஆர் ரஹ்மான்: என்ன காரணம்?

Mahendran
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (11:27 IST)
சென்னை அண்ணா சாலை அருகே உள்ள தர்காவுக்கு ஆடி காரில் வந்த இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆட்டோவில் வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்க இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இன்று வருகை தந்தார். அவர் தனக்கு சொந்தமான ஆடி காரில் தர்காவுக்கு வருகை தந்த நிலையில் சிறப்பு பிரார்த்தனை முடித்துவிட்டு அவர் தர்காவில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது அவரைப் பார்க்க கூட்டம் கூடியதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் உடனடியாக தர்காவின் பின்புறத்தில் ஒரு ஆட்டோ வரவழைக்கப்பட்டு அந்த ஆட்டோவில் ஏஆர் ரஹ்மான் ஏறி சென்றார்.

கார் டிரைவர் மட்டும் அவரது ஆடி கார் எடுத்துக்கொண்டு வெளியே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணா சாலை தர்காவுக்கு ஏஆர் ரஹ்மான் வந்ததை கேள்விப்பட்ட ரசிகர்கள் தர்கா முன் குவிந்ததால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments