Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட்பிரபு- நாக சைதன்யா படத்தில் இருந்து விலகிய அருண் விஜய்?

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:00 IST)
நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அருண் விஜய் தற்போது விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. நாக சைதன்யா நடித்த கடைசிப் படமான தேங்க் யூ ப்ளாப் ஆனதால் இந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரி ரிலீஸில் மாஸ் காட்டியதா விஜய்யின் ‘சச்சின்’… வசூல் நிலவரம் என்ன?

“மோசமான நடிப்பு… அந்த படங்களைப் பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது” – சமந்தா ஓபன் டாக்!

எங்கள் தலைவி படத்தின் அப்டேட் கொடுங்கள்.. பிக்பாஸ் ரைசா ஆர்மியின் டிரெண்டிங்..!

போலி புரட்சிவாதிகளுக்கு இதுதான் கதி.. சூர்யாவின் தொடர் தோல்வி குறித்து நெட்டிசன்கள்..!

ஜிடி4 கார் ரேஸில் ஜெயித்தவுடன் அஜித் கூறிய மெசேஜ்.. ரசிகர்கள் உற்சாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments