Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து இயக்கும் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய பாரதிராஜா!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (14:11 IST)
தமிழ் சினிமாவின் பெருமை மிகு இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா கடைசியாக மீண்டும் முதல் மரியாதை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் படங்களில் நடித்து, இயக்கத்துக்கு ஒரு இடைவெளி விட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு அவர் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தை உருவாக்க உள்ளாராம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்க உள்ளார். தாய்மெய் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் 5 நாட்கள் மட்டும் நடத்தி முடித்துள்ளாராம் பாரதிராஜா. மீதக் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments