என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

Mahendran
வியாழன், 4 டிசம்பர் 2025 (13:30 IST)
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 20 போட்டியாளர்களில் 9 பேர் வெளியேறியுள்ள நிலையில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, வெளியேற்றப்பட்ட போட்டியாளரான ஆதிரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வெளியிலிருந்து பார்த்து வந்த அனுபவத்துடன் ஆதிரை திரும்பியிருப்பது, நிகழ்ச்சியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், இன்று வெளியான முதல் புரொமோவில், போட்டியாளர்களான பார்வதி, கம்ருதீன் மற்றும் FJ ஆகிய மூவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடிக்கிறது.
 
FJ, கம்ருதீனிடம், "மூணு நாள் தான் தூங்குனேன் என்று சொல்லிவிட்டு, கேம்-ல் என்ன பண்ணினீர்கள்? உன்னை மாதிரி நான் பார்வதிக்கு சப்போர்ட் செய்யவில்லை" என்று சண்டைக்கு இழுக்கிறார். 
 
இதற்கு ஆவேசமாக பதிலளித்த பார்வதி, "என்னை வைத்து சண்டை போடுவதற்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது. நீ யார் என்னை பற்றிப் பேசுவதற்கு?" என்று FJ-யிடம் கோபத்துடன் கத்துகிறார். இந்த சண்டை அடுத்த வார ஆட்டத்தின் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

அடுத்த கட்டுரையில்
Show comments