Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாத்த படக்குழுவுக்கு பயோ பபுள் – சன் பிக்சர்ஸ் அதிரடி திட்டம்!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (15:02 IST)
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க பட வுள்ள நிலையில் படக்குழுவினர் அனைவரையும் ஒருங்கிணைத்து பயோ பபுளை உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பல வருடங்களாக கன்னித்தீவு போல இழுத்துக் கொண்டிருந்த ரஜினியின் அரசியல் வருகை இப்போது உறுதியாகியுள்ளது. ஜனவரி மாதம் கட்சி ஆரம்பித்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் ரஜினி அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை எனவும் கூறியுள்ளார்.

இதனால் அண்ணாத்த படம்தான் அவரின் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ரஜினிகாந்தின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக அரசியல் மற்றும் சினிமா என இரட்டைக் குதிரையில் அவரால் பயணிக்க முடியாது என்பதால் அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிடலாம் என்ற முடிவில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா அச்சம் அதிகமாக உள்ள நிலையில் படக்குழுவினர் அனைவரையும் உள்ளடக்கிய பயோபபுள் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சன் நிறுவனத்தின் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு இதே போல பயோ பபுள் உருவாக்கி கலந்து கொள்ள வைத்ததைப் போல இப்போது அண்ணாத்த படக்குழுவுக்கு பயோபபுள் உருவாக உருவாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையில் நடிகர் பாபிசிம்ஹா கார் விபத்து. ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம்..

இன்னும் எத்தனை திருமணம் செய்வார் கமல்ஹாசன்.. அவரே அளித்த பதில்..!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்!

சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

கார்த்தி & சுந்தர் சி படத்தில் நயன்தாராதான் கதாநாயகியா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments