Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நடிகையை படம் பிடித்தவர் மீது வழக்குப் பதிவு !

Webdunia
வியாழன், 12 மே 2022 (16:54 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையைப் படம் பிடித்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 நடிகர்  கருணாஸ் ஹீரோவாக நடித்த படம் அம்பாசமுத்திரம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்  நவ்னீத் ராணா. இவர் மகாராஷ்டிர மா நிலம் அமராவதி தொகுதி எம்பியாக உள்ளார்.

 இவரது கணவர் எம்.எல்.ஏவாக உள்ளார்.  சில நாட்களுக்கு முன் நடிகையும் அவரது கணவர் ராணாவும் மகாராஷ்டிர மா நிலம் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் மந்திரம் ஓத முயன்றனர்.

அப்போது,   நவ்னீத் ராணா மற்றும் அவரது கணவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருவரும் 12 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை ஆகினர்.  திடீரென்று நவ்னீத் ராணாவுக்கு  நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டபோது, ஒரு மர்ம நபர் அவரை படம் பிடித்தார்.

இதுகுறித்து, நவ்னீத்ராணா போலீஸில் புகாரளித்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைப் கைப்பற்றி,   நவ்னீத்தை புகைப்படம் எடுத்தவர் மீது வழக்குப் பதிவு போலீஸார் விசரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

அடுத்த கட்டுரையில்
Show comments