Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்துவின் காலில் விழுந்தது ஏன்?- சின்மயி விளக்கம்

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (15:50 IST)
திருமண விழாவில் வைரமுத்து காலில் விழுந்தது ஏன் என்பது குறித்து சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

 
‘மீ டூ' ஹேஷ்டேக் இயக்கம் மூலம் தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் பலரும் “உங்களுடைய திருமணத்திற்கு வந்த வைரமுத்துவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன்” என்று  கேள்வி எழுப்பி வந்தார்கள். 
 
இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களிடம் சின்மயி விளக்கம் அளித்தார்.
 
எனது திருமணத்துக்கு வைரமுத்துவுக்கு பத்திரிகை வைத்ததற்குக் காரணம் கார்க்கி எனது நண்பர். அப்பாவுக்கு பத்திரிகை வைத்தீர்களா? என்கிற அவரின் கேள்விக்காக சங்கடப்பட்டுக் கொண்டே பத்திரிக்கை வைத்தேன்.
 
திருமணத்தில் வாழ்த்திய அனைவர் காலிலும் விழுந்தேன். வைரமுத்து காலில் விழுந்ததற்குக் காரணம் எனது மாமியார், மாமனாருக்கு இந்த விவகாரம் தெரியாது. ஆகவே காலில் விழாமல் தவிர்ப்பதற்குக் காரணம் சொல்ல முடியாததால் அது நடந்தது. இவ்வாறு சின்மயி தனது பேட்டியின் போது விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்