Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகுமாருக்கு ஜோடியாகும் தெலுங்கு பட நாயகி!

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (20:39 IST)
நடிகர் , இயக்குனர் சசிகுமார் நடித்த 'அசுரவதம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து படுதோல்வி அடைந்ததை அடுத்து அவர் ஹீரோவாக நடித்த படம் இதுவரை வெளியாகவில்லை. சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நாடோடிகள் 2', கொம்பு வச்ச சிங்கம், கென்னடி கிளப் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும், இந்த படங்களின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை 
 
இந்த நிலையில் சசிகுமார் நடித்து வரும் படங்களில் ஒன்று 'நாநா'. இந்த படத்தை இயக்குனர் நிர்மல் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'நாநா' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க சித்ரா சுக்லா என்ற நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் நா.நாராயணன் என்ற கேரக்டரில் சசிகுமார்  நடித்து வருவதாகவும், மும்பை போலீஸ் கேரக்டரில் சரத்குமார் நடித்து வருவதாகவும், நாயகி சித்ரா சுக்லா ஒரு டான்சர் கேரக்டரில் நடித்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
'நாநா' படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும், இதனையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறவிருப்பதாகவும், இந்த ஆண்டுக்குள் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ஓவர் ஆக்டிங்கோனு தோனுது – இயக்குனர் சேரன் சந்தேகம்!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments