Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Prasanth Karthick
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (16:12 IST)

தனது ரசிகரை கொலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தனது ரசிகரான ரேணுகாஸ்வாமியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முதுகுவலியால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சைக்காக 6 வார இடைக்கால ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். 

 

அதற்கு கர்நாடக ஐகோர்டு அனுமதி வழங்கிய நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 

ALSO READ: காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!
 

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை மேற்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக சிறையில் இருந்த நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments