Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க்ளைமேக்ஸை நெருங்கிய டிமாண்டி காலணி 2 ஷூட்டிங்… அருள்நிதி தகவல்!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (09:00 IST)
தமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிமாண்ட் உச்சத்தில் இருந்தபோது வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் தான் டிமாண்ட்டி காலணி. இந்த படத்தில் அருள்நிதி, சனத் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்த நிலையில் அறிமுக இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளாகவே படமாக்கி முடிக்கப்பட்டு வெளியான இந்த படம் நல்ல வசூலைக் குவித்தது.

இதையடுத்து இப்போது அதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகத்தை எழுதி, தயாரிக்க உள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இரண்டாம் பாகத்திலும் அருள்நிதியே நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு அஜய் ஞானமுத்து திரைக்கதை மட்டுமே எழுத உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அவரின் உதவியாளர் ஒருவர் இந்த படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கோப்ரா படத்தின் தோல்வியால், அஜய் ஞானமுத்துவே இந்த படத்தை இயக்கும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோப்ரா படத்துக்குப் பிறகு அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வராததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் இன்னும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் படத்தின் கதாநாயகன் அருள்நிதி கூறியுள்ளார். மேலும் தனக்கான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments