Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பாகுபலி இமேஜில் இருந்து வெளிவர விரும்பவில்லை” – பிரபாஸ்

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (18:05 IST)
‘பாகுபலி இமேஜில் இருந்து நான் வெளிவர விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார் பிரபாஸ்.


 

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்த படம் ‘பாகுபலி’. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம், ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் கிடைத்த இமேஜில் இருந்து வெளிவர விரும்பவில்லை என்கிறார் பிரபாஸ்.

“இது எனக்குக் கிடைத்த வாழ்நாள் வரம். அதை கடைசிவரை என்னுடனே வைத்துக் கொள்வேன். இவ்வளவு சாதனைகள் படைத்த ‘பாகுபலி’யின் ஹீரோ நான் என்பது பெருமையாக இருக்கிறது. எங்கு போனாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர். தெலுங்கு மக்களுக்கு மட்டுமே தெரிந்த என்னை, உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறது இந்தப் படம்” என்கிறார் பிரபாஸ். தற்போது ‘சாஹு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் தயாராகிறது இந்தப் படம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments