Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வாணி ராணி’யைத் தொடர்ந்து ராதிகாவின் அடுத்த சீரியல்

Webdunia
வியாழன், 31 மே 2018 (09:57 IST)
‘வாணி ராணி’ இறுதிக்கட்டத்தை நெருங்குவதால், அடுத்த சீரியலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ராதிகா சரத்குமார்.
சீரியல் உலகில் அசைக்க முடியாத ராணியாக இருந்து வருகிறார் ராதிகா சரத்குமார். ‘சித்தி’ தொடங்கி, அவர் இதுவரை நடித்த, தயாரித்த எல்லா சீரியல்களுமே பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை. அந்த அளவுக்கு சீரியல் ரசிகர்களின் பல்ஸைக் கணித்து, அதற்கு ஏற்றார்போல் சீரியலைத்  தருவார்.
 
தற்போது அவர் ‘வாணி ராணி’ என்ற சீரியலைத் தயாரித்து, நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில், அக்கா - தங்கை என  இரண்டு வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்குவதால், அடுத்த சீரியலில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் ராதிகா  சரத்குமார்.
‘சந்திரகுமாரி’ என இந்த சீரியலுக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு இந்த சீரியல் தயாராக இருக்கிறது. ரஜினியின்  ‘பாட்ஷா’ படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இந்த சீரியலை இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments