Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை: ஆர்.கே.சுரேஷ்

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (18:44 IST)
ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் ஆர்கே சுரேஷ், தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
 
அப்போது,  திடீரென ஆர் கே சுரேஷ் துபாய்க்கு சென்று விட்டதை அடுத்து அவர் சமீபத்தில் சென்னை திரும்பிய நிலையில், அவர் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
 
அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர்  அவர் தெரிவித்துள்ளதாவது:
 
‘’தனக்கும் ஆருத்ரா  மோசடிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது. அது நாளை சமர்ப்பிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், ‘’சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் நாளை ஆஜராகவுள்ளதாக’’ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments