Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலில் எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது -விஜய் சேதுபதி!

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (15:16 IST)
நடிகர் விஜய் சேதுபதி தனக்கு நிறைய ஈகோ இருக்கிறது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். 
 
நாளை வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் படக்குழுவினர்  புரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர். அந்தவகையில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த விஜய் சேதுபதியிடம், ‘ நீங்கள், உங்கள் ரசிகர்களின் பெயர்களைக்கூட நியாபகம் வைத்திருப்பீர்கள் எனவும்  அவர்களிடம் எந்தவிதமான  ஈகோவும் பார்க்க மாட்டீர்கள் என்ற  கருத்து நிலவுகிறது. உண்மையில், உங்களிடம் ஈகோவே கிடையாதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்குப் பதில் அளித்த நடிகர் விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது. உண்மையில் ஈகோ இல்லாத மனிதரே இருக்க முடியாது. ஈகோ இருந்தால் தான் உங்களை வளர்த்து உயரத்திற்கு கொண்டு செல்லும். அதேநேரத்தில் , ஈகோ அதிகமானால் அதை அடுத்தவர்களிடம் காட்டக்கூடாது. தொழிலில் மட்டுமே அந்த ஈகோவைக் காட்டவேண்டும்” என அவர் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments