Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி – இணையத்தைக் கலக்கும் புகைப்படம் !

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (15:59 IST)
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி. ஒருப் பாடலை பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் தமிழரசன் படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பாடல்களை பழனிபாரதி மற்றும் ஜெயராம் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். இந்த படத்தின் ஒருப் பாடலை 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜேசுதாஸ் பாடினார். இளையராஜா இசையில் கடைசியாக அவர் மலையாளத்தில் வெளியான பழசிராஜா படத்தில் பாடினார்.

அதையடுத்து இப்போது அதேப் படத்தில் எஸ்.பி.பி ‘வா வா மகனே’ எனும் தாலாட்டுப்பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் வெளியாகி இளையராஜா மற்றும் எஸ்.பி.பி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இருவருக்கும் இடையிலான ராயல்டி பிரச்சனைகள் முடிந்து நாளை சென்னையில் நடக்கும் இளையராஜாவின் கச்சேரியில் எஸ்.பி.பி பாட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments