Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி – இணையத்தைக் கலக்கும் புகைப்படம் !

இளையராஜா
Webdunia
சனி, 1 ஜூன் 2019 (15:59 IST)
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி. ஒருப் பாடலை பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் தமிழரசன் படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பாடல்களை பழனிபாரதி மற்றும் ஜெயராம் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். இந்த படத்தின் ஒருப் பாடலை 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜேசுதாஸ் பாடினார். இளையராஜா இசையில் கடைசியாக அவர் மலையாளத்தில் வெளியான பழசிராஜா படத்தில் பாடினார்.

அதையடுத்து இப்போது அதேப் படத்தில் எஸ்.பி.பி ‘வா வா மகனே’ எனும் தாலாட்டுப்பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் வெளியாகி இளையராஜா மற்றும் எஸ்.பி.பி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இருவருக்கும் இடையிலான ராயல்டி பிரச்சனைகள் முடிந்து நாளை சென்னையில் நடக்கும் இளையராஜாவின் கச்சேரியில் எஸ்.பி.பி பாட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments