நடிக்க வரலைன்னா பரவாயில்ல.. கூப்பிட்டு வாங்க! – அந்த மனசுதான் ரஜினிகாந்த்!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (10:26 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் அதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று வைரலாகியுள்ளது.



நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள படம் ஜெயிலர். இந்த படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். வெளியான முதல் நாளே ரூ.72 கோடி வரை வசூல் செய்துள்ள ஜெயிலர் தொடர்ந்து திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் வெற்றிக் குறித்து பேட்டியளித்த நெல்சன் படப்பிடிப்பில் ரஜினி செய்த செயல் குறித்து பேசியுள்ளார். ஜெயிலர் படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியில் நடிகர் ரஜினிகாந்துடன் சிறை கைதியாக ஒருவர் நடித்துள்ளார். அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட்டால் அந்த காட்சியில் சரியாக நடிக்க முடியவில்லை. சில ரீடேக்குகள் எடுத்ததால் அவருக்கு பதிலாக வேறு நபரை நடிக்க வைக்கலாம் என பேசியிருக்கிறார்கள்.

அதற்கு ரஜினிகாந்த் “அவர் இந்த படத்தில் நடிக்க போவதாக வீட்டில் சொல்லிவிட்டு நம்பிக்கையோடு வந்திருப்பார். அவருக்கு நடிக்க வரவில்லை என்றால் பரவாயில்லை. அவரை ஏமாற்ற வேண்டாம். அழைத்து வாருங்கள்” என சொல்லி அந்த நபரை வைத்தே அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் இந்த செயல் குறித்து சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியோடு பேசி வரும் நிலையில் அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்த காட்சியும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments