Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தையா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Mahendran
வெள்ளி, 15 நவம்பர் 2024 (13:07 IST)
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஜெயம் ரவி விவாகரத்துக்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என தகவல் வெளியானது.  
 
ஜெயம் ரவி , ஆர்த்தி திருமணம் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்து, திருமணத்தை ரத்து செய்ய கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார். ஆனால், இந்த விவகாரம் குறித்து தன்னிடம் ஆலோசனை செய்யாமல், ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என்று ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், ஜெயம் ரவி தாக்கல் செய்த விவாகரத்து மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இருவரும் சமரசம் செய்யும்விதமாக தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
 
இதனால், இன்று ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம்: இயக்குனர் பார்த்திபன்

அடுத்த கட்டுரையில்
Show comments