Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லப்பர் பந்து படத்தால் விஜயகாந்தின் மகனின் படத்துக்கே வந்த சிக்கல்… !

vinoth
செவ்வாய், 12 நவம்பர் 2024 (10:01 IST)
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டு பின்தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஆக்‌ஷன் காட்சியில் விஜயகாந்தின் ஹிட் பாடலான ‘நீ பொட்டு வச்ச தங்கக் கொடம்’ என்ற பாடலை இளையராஜா ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தலாம் என்று நினைத்திருந்தார்களாம். அதற்கு இளையராஜாவும் சம்மதம் தெரிவித்திருந்தாராம். ஆனால் அதற்குள் லப்பர் பந்து படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி விட்டதால் இப்போது அந்த பாடலை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments