Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிமாண்டி காலணி படத்தில் நடந்த முக்கிய மாற்றம்… கோப்ரா தோல்வி எதிரொலியா?

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (16:04 IST)
டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தயாரிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிமாண்ட் உச்சத்தில் இருந்தபோது வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் தான் டிமாண்ட்டி காலணி. இந்த படத்தில் அருள்நிதி, சனத் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்த நிலையில் அறிமுக இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளாகவே படமாக்கி முடிக்கப்பட்டு வெளியான இந்த படம் நல்ல வசூலைக் குவித்தது.

இதையடுத்து இப்போது அதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகத்தை எழுதி, தயாரிக்க உள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இரண்டாம் பாகத்திலும் அருள்நிதியே நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு அஜய் ஞானமுத்து திரைக்கதை மட்டுமே எழுத உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அவரின் உதவியாளர் ஒருவர் இந்த படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கோப்ரா படத்தின் தோல்வியால், அஜய் ஞானமுத்துவே இந்த படத்தை இயக்கும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோப்ரா படத்துக்குப் பிறகு அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வராததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments