Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோர மக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கிய நயன்தாரா: எழும்பூரில் பரபரப்பு

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (08:17 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. அவரது திருமணதின்போது தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களில் இலவசமாக உணவு பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சாலையோரம் உள்ள மக்களுக்கு திடீரென பரிசுகளை வழங்க நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு அவர் பரிசுப் பொருட்களை வழங்கினார். பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் இந்த பரிசு பொருளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நயன்தாராவிடம் இருந்து பரிசு பொருளை வாங்க சாலையோர மக்கள் முண்டியடித்ததால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments