Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நான் திமிர் பிடித்தவளா?... “ நடிகை நித்யா மேனன் பதில்

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (08:55 IST)
நடிகை நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றதோடு அவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகையாக இருந்தாலும் இயக்கத்தைப் பற்றியும் சினிமாவைப் பற்றியும் நல்ல அறிவு உள்ள நடிகை என பாராட்டப்படுபவர் . தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் பற்றி அவ்வப்போது சில வதந்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு சிறு இடைவெளிக்குப் பின் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது தன்னைப் பற்றி எழுந்துள்ள வதந்தி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள நித்யா மேனன் “சினிமாவில் என்னைப் பற்றி எல்லோரும் திமிர் பிடித்தவள் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. எனக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் எனக்கு எதிராக பொய்யைப் பரப்புகிறார்கள். என் வளர்ச்சியை பார்க்க முடியாதவர்கள் என்னைக் கீழிறக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். என்னுடன் பணியாற்றியவர்கள் யாரும் என்னோடு வேலை செய்வது கடினம் என்று கூறியதில்லை” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு வெளியிட்டப் புகைப்படம்!

நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த வெப் சீரிஸ் பணிகளைத் தொடங்கிய விஜய் சேதுபதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் சர்தார் 2.. ஆனாலும் இன்னும் அந்த பிஸ்னஸ் நடக்கவில்லையாம்!

குட்னைட் இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments