Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிராஜிடம் கதைக் கேட்க மறுத்த ரஜினி!

Webdunia
புதன், 26 மே 2021 (16:59 IST)
நடிகர் ரஜினிகாந்துக்காக ஒரு கதையை எழுதிய பாண்டிராஜ் அதை அவரிடம் சொல்லுவதற்கு எவ்வளவோ முயன்றும் அவரால் ரஜினியை சந்திக்க முடியவில்லையாம்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி புதுக்கோட்டையில் நடைபெற்று வந்தது. ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்தை விறுவிறுப்பாக இயக்கி வந்தார் பாண்டிராஜ். அதற்கிடையில் சூர்யா ஏற்கனவே ஒத்துக்கொண்ட இயக்குனர் ஞானவேல் படத்தில் நடிக்க சென்றார்,

அந்த இடைவெளியில் சும்மா இருக்காமல் பாண்டிராஜ் நடிகர் ராஜ்கிரணை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை தொடங்கி 10 நாட்கள் படப்பிடிப்பும் நடத்தி முடித்தாராம். ஆனால் கொரோனா லாக்டவுனால் இப்போது அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த படத்தில் ராஜ்கிரண் தமிழ் ஆசிரியராக நடிக்கிறாராம். முதலில் அந்த கதையை பாண்டிராஜ் ரஜினிக்காகதான் உருவாக்கினாராம். ஆனால் எவ்வளவோ முயன்றும் அவரால் கதையை ரஜினிக்கு சொல்ல முடியவில்லையாம். அதனால் ராஜ்கிரணை வைத்து அந்த படத்தை இயக்கி வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments