Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில மோசடி வழக்கு… நடிகர் சூரி கமிஷனர் அலுவகலத்தில் ஆஜர் !

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (16:11 IST)
நடிகர் சூரி, ரூ.2.70 கோடி நில மோசடி வழக்கில் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் சூரி, சென்னை அடையாறு போலீஸ் நிலையத்தில்  புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், சிறுசேரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2. 70 கோடி  பண மொசடி செய்துவிட்டதாக முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணுவிஷாலின தந்தையுமான ரமேஷ்கொடவாலா , சினிமா தயாரிப்பாளார் அன்பு வேல்ராஜன் மீது அந்த மனுவில் குற்றசாட்டியிருந்தார்.

இந்தப் புகாரை ரமேஷ்கொடவாலா மறுத்தார். இந்த புகார் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது சூரியின் புகாரை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷ்னர் மீனா விசாரித்து வரு கிறார்.  நேற்று சூரியிடம் விசாரணை நடத்தப்பட்ட  நிலையில், அப்போது அவரிடம் 100 கேள்விகள் கேட்டதாகத் தெரிகிறது.இன்று 2 வது நாளாக மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல்,  முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணுவிஷாலின தந்தையுமான ரமேஷ்கொடவாலா , சினிமா தயாரிப்பாளார் அன்பு வேல்ராஜன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments